டெல்லியில் அரசு மருத்துவமனைகளில் மற்ற மாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்- துணைநிலை ஆளுநர்

 

டெல்லியில் அரசு மருத்துவமனைகளில் மற்ற மாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்- துணைநிலை ஆளுநர்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்கு மட்டுமே என தெரிவித்தார். மத்திய அரசின் மருத்துவமனைகளில் அனைவரும் அனுமதிக்கப்படுவர் என்றும், ஜூன் மாத இறுதியில் டெல்லியில் 15,000 படுக்கைகள் தேவைப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளிலும் டெல்லி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

டெல்லியில் அரசு மருத்துவமனைகளில் மற்ற மாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்- துணைநிலை ஆளுநர்

இந்நிலையில் டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார். நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.