குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை : சோகத்தில் சுற்றுலா பயணிகள்!

 

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை : சோகத்தில் சுற்றுலா பயணிகள்!

நீர்வரத்து காரணமாக குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை : சோகத்தில் சுற்றுலா பயணிகள்!

கொரோனா நோய் தொற்று காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தடையானது கடந்த 15 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டு பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டநிலையில் அருவியில் குளிக்க நேர கட்டுப்பாடு அளிக்கப்பட்டது.

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை : சோகத்தில் சுற்றுலா பயணிகள்!

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது . மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் தண்ணீரில் பாறாங்கற்கள் அடித்து கொண்டு வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.