குற்றாலத்தில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

 

குற்றாலத்தில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

கனமழை காரணமாக குற்றாலத்தில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் தென்காசி குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்குள்ள பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட்டுவது பார்க்க ரம்மியமாக உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் இல்லாமல் அப்பகுதி வெறிசோடி காணப்படுகிறது.

குற்றாலத்தில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

இந்நிலையில் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் 2 ஆவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஊரடங்கில் 5 ஆம் கட்ட தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க விரைவில் அனுமதி அளிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வருகின்றனர்.