அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது – நீதிமன்றம் திட்டவட்டம்!

 

அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது – நீதிமன்றம் திட்டவட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்களது வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், கோவையில் சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது – நீதிமன்றம் திட்டவட்டம்!

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் விளம்பரத்திற்காகவே தொடரப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அனைவருக்கும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் நிவாரணம் வழங்குவது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும், கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் நடவடிக்கை எடுக்கப்படாவிடில் நீதிமன்றம் தாமாக எடுத்து விசாரிக்கும் வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.