ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

 

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திமுக கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

அந்த புகாரின் பேரில் கடந்த 23 ஆம் தேதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமீனை ரத்து செய்யுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவர் சரண் அடையும் தினத்தில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று முதன்மை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.