திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலை என்ன? நீதிமன்றம் கேள்வி

 

திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலை என்ன? நீதிமன்றம் கேள்வி

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரப்பி வந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் தகவல்கள் பரப்புவது The Epidemic Diseases Act and Regu- lations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி அவர் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலை என்ன? நீதிமன்றம் கேள்வி

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியது மட்டுமில்லாமல், மக்களிடம் கொரோனா சிகிச்சை செய்வதாக பணம் பறித்ததாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்தன. இதனால் போலி சித்த மருத்துவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் திருத்தணிகாசலத்தின் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் முதல்வரை பற்றி அவதூறாக விமர்சிப்பது சரியா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவரது குண்டர் சட்டத்தின் மீதான முடிவை தற்போது எடுக்க இயலாது என்று தெரிவித்தனர். மேலும், சித்த மருத்துவர் என கூறப்படும் திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.