ஆன்லைன் வகுப்பு விதிகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ஆன்லைன் வகுப்பு விதிகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த மாதம் 30 ஆம் தேதி இணையவழி வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டது. அதில் முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்பு நடத்தலாம் என்றும் தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் வகுப்பு விதிகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதே போல எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்றும் 1-8 ஆம் வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9-12 ஆம் வகுப்பு வரை 3 மணி நேரம் வகுப்பு நடத்தலாம் என்றும் ஒவ்வொரு வகுப்புகளுக்கான நேரம் 30 முதல் 45 நிமிடங்களாக தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாளைக்கு 6 வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவேளை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ஆன்லைன் வகுப்புக்கு தடைக்கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறைகளை வகுத்த தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அந்த வழக்கு விசாரணையை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.