கிரிஜா வைத்தியநாதன் நியமனம்… நீதிமன்றம் அதிருப்தி!

 

கிரிஜா வைத்தியநாதன் நியமனம்… நீதிமன்றம் அதிருப்தி!

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இவர் தமிழகத்தில் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றியவர். கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கிரிஜா வைத்தியநாதன் நியமனம்… நீதிமன்றம் அதிருப்தி!

அவர்கள் அளித்திருந்த மனுவில், கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச் சூழல் சார்ந்த துறையில் போதிய அனுபவம் இல்லை என்றும் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை கடந்த 9ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர் தெரிவித்ததைப் போல சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என கருத்து தெரிவித்தனர். மேலும், கிரிஜா நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை 16ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

கிரிஜா வைத்தியநாதன் நியமனம்… நீதிமன்றம் அதிருப்தி!

இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக சில ஆவணங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்தன. அந்த ஆவணங்களை பார்த்த நீதிபதிகள், தீர்ப்பாயங்களில் நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வரும் 19ம் தேதி பதவியேற்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.