‘இளம் தம்பதி விஷமருந்தி தற்கொலை’ : குழந்தை இல்லாததால் எடுத்த விபரீத முடிவு!

 

‘இளம் தம்பதி விஷமருந்தி தற்கொலை’ : குழந்தை இல்லாததால் எடுத்த விபரீத முடிவு!

குழந்தை இல்லாத சோகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இளம் தம்பதி விஷமருந்தி தற்கொலை’ : குழந்தை இல்லாததால் எடுத்த விபரீத முடிவு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி பகுதியில் வசித்து வந்த தம்பதி வைகுண்டம்(27) – கரி சுல்தான் (23). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை வெகு நேரம் ஆகியும் இந்த தம்பதி வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

‘இளம் தம்பதி விஷமருந்தி தற்கொலை’ : குழந்தை இல்லாததால் எடுத்த விபரீத முடிவு!

விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அந்த தம்பதிக்கு பணப்பிரச்னை ஏதும் இல்லை என்றும் குழந்தை இல்லாததால் அவர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. அதனிடிப்படையில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.