‘காதல் ஜோடி சுட்டுக் கொலை’: பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்!

 

‘காதல் ஜோடி சுட்டுக் கொலை’: பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்!

ஹரியானாவில் திருமணம் செய்து கொள்ள நீதிமன்றத்தை நாடிய காதல் ஜோடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரும் 27 வயதான ஆண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். பெண் வீட்டார் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இதனையடுத்து , நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அந்த தம்பதி நேற்று நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.

‘காதல் ஜோடி சுட்டுக் கொலை’: பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்!

மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகம் அருகே அந்த காதல் ஜோடியை வழிமறித்த கும்பல், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உதவச் சென்ற சகோதரர் ஒருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண் வீட்டார் இந்த செயலை செய்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஆணவக் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் உயிரிழந்த அந்த பெண் வீட்டை சேர்ந்த சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காதல் ஜோடி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.