சொத்து தகராறில் தம்பதி வெட்டிக்கொலை… அண்ணன் மகன் வெறிச்செயல்…

 

சொத்து தகராறில் தம்பதி வெட்டிக்கொலை… அண்ணன் மகன் வெறிச்செயல்…

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் தம்பதியை வெட்டி படுகொலை செய்த உறவினர் உள்பட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி வீரப்பன் நகரில் வசித்து வந்தவர் புகழேந்தி (53). இவரது மனைவி பப்பிராணி (46). தச்சு தொழில் செய்து வந்த புகழேந்திக்கும், அவரது அண்ணன் இளங்கோவனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் இளங்கோவனின் மகன் லோகேஷ் (18), அவரது நணபர் சதீஷ்(18) ஆகியோர் புகழேந்தியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்த லோகேஷ், சதீஷ் ஆகியோர், புகழேந்தி மற்றும் பப்பி ராணியை அரிவாளால் சராமாரியாக வெட்டினர்.

சொத்து தகராறில் தம்பதி வெட்டிக்கொலை… அண்ணன் மகன் வெறிச்செயல்…

மேலும், இதனை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டில் வசித்து பெண் உள்பட 2 பேரை வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், விரைந்து சென்று . தம்பதியினர் இருவரது சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகள் லோகேஷ், சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சொத்து தகராறில் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.