திருமயம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – தம்பதி பலி!

 

திருமயம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – தம்பதி பலி!

புதுக்கோட்டை

திருமயம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த வாதிரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைசாமி. விவசாயி. இவரது மனைவி மல்லிகா (42). இவர்கள் நேற்று முன்தினம் காரைக்குடியில் நடந்த உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் புறபட்டு சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் திருமயம் நரியன்காடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் உடன் சென்று கொண்டிருந்தார்.

திருமயம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – தம்பதி பலி!

இந்த நிலையில்ல், திருமயம் அருகே சென்று கொண்டிருந்த போது, வெள்ளைசாமியின் வாகனத்தின் மீது எதிரே வந்த கார் அதிவேகமாக மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட வெள்ளைசாமி, மல்லிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த லெட்சுமணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவல் அறிந்த திருமயம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.