“விரட்டிய கொள்ளையர்கள் ,மிரட்டிய மனைவி” – கொள்ளையர்களிடம் சிக்கிய கணவனை சினிமா போல காப்பாற்றிய மனைவி ..

 

“விரட்டிய கொள்ளையர்கள் ,மிரட்டிய மனைவி” – கொள்ளையர்களிடம் சிக்கிய கணவனை சினிமா போல காப்பாற்றிய மனைவி ..

காரில் சென்றபோது வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலில் சிக்கிய பொறியாளரை அவரின் மனைவி காப்பாற்றிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்புக்குள்ளானது .

“விரட்டிய கொள்ளையர்கள் ,மிரட்டிய மனைவி” – கொள்ளையர்களிடம் சிக்கிய கணவனை சினிமா போல காப்பாற்றிய மனைவி ..திங்கள்கிழமை அதிகாலை பெங்களூருவில் ஹெப்பல் ஃப்ளை ஓவர் அருகே நரேஷ் என்ற மென்பொருள் பொறியாளர் தனது மனைவியுடன் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார் .இந்த தம்பதியினர் சிக்கமங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தபோது வழியில் சில நெடுஞ்சாலை கொள்ளையர்கள் அவரின் காரை தடுத்து நிறுத்தினர் ,உடனே காரை நரேஷ் நிறுத்தியதும் ,பைக்கில் வந்த அந்த கொள்ளையர்கள் நரேஷை பலமாக தாக்கி அவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர் .இந்த தாக்குதலில் நரேஷுக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டதால் வலியால் துடித்தார் .

“விரட்டிய கொள்ளையர்கள் ,மிரட்டிய மனைவி” – கொள்ளையர்களிடம் சிக்கிய கணவனை சினிமா போல காப்பாற்றிய மனைவி ..அப்போது சமயோசிதமாக செயல்பட்ட அவரின் மனைவி காரின் கியரை மாற்றி ,ஆக்சிலேட்டரை அமுக்கி காரை வேகமாக எடுத்தார் .உடனே வேகமெடுத்த கார் எதிரே நின்றிருந்த கொள்ளையர்களின் பைக்கின் மீது மோதியது .இதில் பைக்கின் மீது அமர்ந்திருந்த சில கொள்ளையர்கள் தடுமாறி கீழே விழுந்தனர் .மற்ற கொள்ளையர்கள் நரேஷின் காரை பின்னால் துரத்திக்கொண்டே ஓடி வந்தார்கள் .அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு,அவர்களிடமிருந்து தப்பித்து வந்த நரேஷும் அவரின் மனைவியும் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர் .அதன்பிறகு அவர்கள் அந்த கொள்ளையர்கள் பற்றி அந்த பகுதி போலீசில் புகார் தந்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .