சீர்காழி அருகே கொரோனா பாதிப்பால் தம்பதி பலி… ஆதரவற்ற நிலையில் குழந்தைகள்!

 

சீர்காழி அருகே கொரோனா பாதிப்பால் தம்பதி பலி… ஆதரவற்ற நிலையில் குழந்தைகள்!

மயிலாடுதுறை

சீர்காழி அருகே கொரோனா தொற்று பாதிப்பால் தம்பதி உயிரிழந்த நிலையில், அவர்களது 2 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், சீர்காழி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 15 வயதில் மகனும், 14 வயதில் மகளும் உள்ளனர்.

சீர்காழி அருகே கொரோனா பாதிப்பால் தம்பதி பலி… ஆதரவற்ற நிலையில் குழந்தைகள்!

இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, அவரது மனைவிக்கும் தொற்று உறுதியான நிலையில், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரும் உயிரிழந்தார்.

கொரோனா நோயால் அடுத்தடுத்து தந்தையும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், அவர்களது குழந்தைகள் இருவரும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.