திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு… காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

 

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு… காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

சென்னை மேடவாக்கம் அருகே உள்ள அரசங்கழனி பகுதியில் வசித்து வந்தவர் அவினாஷ் (31). இவர் பெங்களூரை சேர்ந்தவர். அவினாஷும் அதே பகுதியில் வசித்து வரும் பல்லவி (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பல்லவி அவினாஷின் உறவினர் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், திருமணம் செய்து கொள்ள பெற்றோரிடம் ஒப்புதல் கேட்டுள்ளனர்.

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு… காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

இரு வீட்டாரும் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணம் செய்து வைக்க மாட்டோம் என திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இந்த காதல் ஜோடி, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி அவினாஷின் அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு அவினாஷ் மற்றும் பல்லவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொல்வதற்கு முன்பே அவர்கள், அவினாஷின் அக்கா வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்களாம். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு… காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

பெற்றோர்கள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது அவினாஷின் அக்கா வீட்டில் ஏதேனும் பிரச்னை நடந்ததால் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.