ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்… தம்பதி விஷம் குடித்து தற்கொலை

 

ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்… தம்பதி விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்துவதில் ஏற்பட்ட நஷ்டத்தால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு முத்துவேலர் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜசேகர், ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வந்தார். மேலும், தனது குடியிருப்பு பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக சீட்டுப்பணம் எடுத்தவர்கள், முறையாக பணத்தை திருப்பி கட்டவில்லை என கூறப்படுகிறது.

ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்… தம்பதி விஷம் குடித்து தற்கொலை

இதனால் ஏலச்சீட்டு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சீட்டில் பணம் எடுக்காதவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜசேகர் மற்றும் அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் நேற்று விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஈரோடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.