வறுமையில் வாடிய முதிய தம்பதி, விஷம் குடித்து தற்கொலை!

 

வறுமையில் வாடிய முதிய தம்பதி, விஷம் குடித்து தற்கொலை!

ஈரோடு

சத்தியமங்கலத்தில் கவனிக்க யாரும் இல்லாததால், வறுமையில் வாடிய வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (73). இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இறந்துவிட்டனர். இந்த நிலையில், கிருஷ்ணராஜ் – ரத்தினம் தம்பதியினர் அந்த பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரது தறி பட்டறையில் பணிபுரிந்து வாழ்வை நடத்தி வந்துள்ளனர்.

வறுமையில் வாடிய முதிய தம்பதி, விஷம் குடித்து தற்கொலை!

இந்த நிலையில், கடந்த மாதம் ஜெகதீஷ் உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் தறிப்பட்டறை செயல்படாததால், தம்பதியினர் இருவரும் வேலை இன்றி தவித்து வந்துள்ளனர். முதுமை காரணமாக வேறு இடத்திலும் வேலை கிடைக்காததால் இருவரும் வறுமையில் வாடி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த தம்பதியினர் இருவரும், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள், சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இதனை அடுத்து, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்ர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.