மின்கசிவால் தீப்பற்றி எரிந்து குடிசை வீடு

 

மின்கசிவால் தீப்பற்றி எரிந்து குடிசை வீடு

சென்னை மதுரவாயல் அருகே மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் (50). அவரது குடிசை வீட்டில் இன்று தீடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

மின்கசிவால் தீப்பற்றி எரிந்து குடிசை வீடு
மின்கசிவால் தீப்பற்றி எரிந்து குடிசை வீடு

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த மின்விசிறி, கட்டில், தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்றிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மின்கசிவால் தீப்பற்றி எரிந்து குடிசை வீடு


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மின்கசிவால் தீப்பற்றி எரிந்து குடிசை வீடு