துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜர்!

 

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் :  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜர்!

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்காக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நீதியரசர் கலையரசன் முன்பு ஆஜரானார்.

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் :  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜர்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் அண்ணா பல்கலை,. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான விசாரணையும் கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில் தன் மீதான புகார்களை மறுத்த சூரப்பா, தான் எந்த ஊழலும் செய்யவில்லை, விசாரணைக்கு தயார் என்று தெரிவித்தார்.

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் :  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜர்!

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஊழல் புகார்கள் குறித்து ஓய்வுப்பெற்ற நீதியரசர் கலையரசன் குழு முன் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள விசாரணை அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார் கருணாமூர்த்தி. அவரிடம் சூரப்பா மீதான புகார்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது. விசாரணைக்கு தேவைப்பட்டால் சூரப்பாவை நேரில் ஆஜராகவும் சொல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.