13 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் கிடந்த சடலம்! திருமணமான மதுரை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

 

13 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் கிடந்த சடலம்! திருமணமான மதுரை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

18 வயது நிறைவடையாத மதுரை சிறுமிக்கு திருமணம் நடந்து, சிறுமி என்பதை போலீசார் கண்டறிந்து தாய் வீட்டுக்கே அனுப்பி, அங்கே வாழ்ந்து வந்த நிலையில், கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொதுவாக ஒரு பெண்ணின் திருமண வயது என்பது அப்பெண்ணின் குடும்ப வருமானத்தை பொறுத்தே அமைகிறது. இதற்கு மேல் வளர்க்க முடியவில்லை என என்றைக்கு பெற்றோர் சுமையாக நினைக்கிறார்களோ, அன்றைக்கே அந்த பெண்ணுக்கு திருமண வயது வந்துவிடுகிறது. அதனால்தான் சிறுமிகள் திருமணம் அதிகரிக்கிறது.

13 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் கிடந்த சடலம்! திருமணமான மதுரை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

மதுரை டி. கல்லுப்பட்டி அருகே டி.அம்மா பட்டியைச்சேர்ந்தவர் தவிடன். இவரது மகள் ஜெயசக்தி பாலா. பனிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தவரை திடீரென திருமணம் செய்துகொடுத்து விட்டனர்.

விருதுநகர் மத்தியசேனையில் முகத்துப்பாண்டியுடன் வாழ்ந்து வந்தபோது, 18 வயது நிறைவடையாத ஜெயசக்தி பாலாவை திருமணம் செய்து கொடுத்த விவகாரம் போலீசாருக்கு தெரியவர, 18 வயது நிறைவடையும் வரையிலும் பெற்றோர் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்,.

13 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் கிடந்த சடலம்! திருமணமான மதுரை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஜெயசக்திபாலாவும் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, டி.அம்மா பட்டியில் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பேரையூர் போலீசில் புகார் அளித்தனர்.

13 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் கிடந்த சடலம்! திருமணமான மதுரை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

போலீசாரின் விசாரணையில், டி.கல்லுப்பட்டி பகுதி கண்மாயில் கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் ஜெயசக்தி பாலாவின் உடல் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடலைக்கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் 13 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

13 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் கிடந்த சடலம்! திருமணமான மதுரை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஜெயசக்தி பாலாவை கொலை செய்தது யார்? என்பது குறித்து பேரையூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கத்திக்குத்து காயங்களுடன் கண்மாயில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலத்தினால், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், சோகமும் இன்னமும் விலகாமல் இருக்கிறது.