அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

 

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிள் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்தியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா உரிதியாகியுள்ளதால் அவரின் கார் ஓட்டுநர், உதவியாளர் என அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

ஏற்கனவே அமைச்சர் கேபி அன்பழகன், தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.