தமிழகத்தில் பாதிக்கு பாதியாக குறைந்த கொரோனா உயிர் பலி! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

 

தமிழகத்தில் பாதிக்கு பாதியாக குறைந்த கொரோனா உயிர் பலி! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,652 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் பாதிக்கு பாதியாக குறைந்த கொரோனா உயிர் பலி! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

சென்னையில் ஒரு லட்சத்து 51ஆயிரத்து 560பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 23,702 பேருக்கும், திண்டுக்கல்லில் 8,065 பேருக்கும், திருநெல்வேலியில் 11,429 பேருக்கும், ஈரோட்டில் 4,903 திருச்சியில் 9,114 பேருக்கும், நாமக்கல் 3,673 மற்றும் ராணிப்பேட்டை 12,364, செங்கல்பட்டு 31,388, மதுரை 15,578, கரூர் 2,327, தேனி 13,965 மற்றும் திருவள்ளூரில் 29,198 பேருக்கு, தூத்துக்குடியில் 12,543 விழுப்புரத்தில் 9,847 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 3,395 பேருக்கும், திருவண்ணாமலையில் 13,642, தருமபுரியில் 2,322 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கு பாதியாக குறைந்த கொரோனா உயிர் பலி! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

இதேபோல் திருப்பூரில் 5,349, கடலூர் 17,097, மற்றும் சேலத்தில் 15,341, திருவாரூரில் 5,678, நாகப்பட்டினம் 4,390, திருப்பத்தூர் 3,951, கன்னியாகுமரியில் 11,311 மற்றும் காஞ்சிபுரத்தில் 19,959 பேருக்கும், சிவகங்கை 4,625 மற்றும் வேலூரில் 13,019 பேருக்கும், நீலகிரியில் 2,596 பேருக்கும், தென்காசி 6,467, கள்ளக்குறிச்சியில் 8,308 பேருக்கும், தஞ்சையில் 8,751, விருதுநகரில் 13,817, ராமநாதபுரத்தில் 5,269 பேருக்கும், அரியலூர் 3,343 மற்றும் பெரம்பலூரில் 1,597 பேருக்கும், புதுக்கோட்டையில் 7,721பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.