8,633 ஆக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 98லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 83ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 8,633பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4,882பேர் ஆண்கள், 2,751பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 6ஆயிரத்து 497ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 9 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 273 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 287பேர் உயிரிழந்துள்ளார். 145 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 142பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,835ஆக அதிகரித்துள்ளது. இன்று 19,860பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,86,653ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.