தமிழகத்தில் 28,864 பேருக்கு கொரோனா, 493 பேர் உயிரிழப்பு

 

தமிழகத்தில் 28,864 பேருக்கு கொரோனா, 493 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 79லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 26ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் 28,864 பேருக்கு கொரோனா, 493 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 28,864பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து 68ஆயிரத்து 580ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,5,546ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 269பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 16,238பேர் ஆண்கள், 12,626பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 2689பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 28,864 பேருக்கு கொரோனா, 493 பேர் உயிரிழப்பு

இன்று 493பேர் உயிரிழந்துள்ளார். 199பேர் தனியார் மருத்துவமனையிலும், 294பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,754ஆக அதிகரித்துள்ளது. இன்று 32,982பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,39,280ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.