தமிழகத்தில் மேலும் 6,162பேருக்கு கொரோனா, 155 பேர் பலி

 

தமிழகத்தில் மேலும் 6,162பேருக்கு கொரோனா, 155 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3கோடியே 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 92ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் மேலும் 6,162பேருக்கு கொரோனா, 155 பேர் பலி

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,162 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,517பேர் ஆண்கள், 2,645பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 49ஆயிரத்து 577ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 49ஆயிரத்து 845ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 273 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 155 பேர் உயிரிழந்துள்ளார். 57பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 98 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 901ஆக அதிகரித்துள்ளது. இன்று 9,046பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,67,831ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.