தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.23 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,859 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,053 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 21ஆயிரத்து 207ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 279 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 28 பேர் உயிரிழந்துள்ளார். 7பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 023ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,145 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 00 ஆயிரத்து 434ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.