இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று !

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று !

இதுவரை உலகம் முழுவதும் 52 லட்சத்து 5 ஆயிரத்து 900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3லட்சத்து 37 ஆயிரத்து 572 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 21 லட்சத்து 58 ஆயிரத்து 562 பேர் குணமாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று !

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று !

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51,784 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் 44,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 12,583ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,517ஆக அதிகரித்துள்ளது.