இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 52,123 பேருக்கு கொரோனா!

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 52,123 பேருக்கு கொரோனா!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரத்து 770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 70 ஆயிரத்து 152 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 1 கோடியே 69 லட்சத்து 6 ஆயிரத்து 604 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 52,123 பேருக்கு கொரோனா!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 52,123 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.20 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 24 மணிநேரத்தில் 52,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் பலியாகியுள்ளனர்.