சென்னையில் சுமார் 90ஆயிரம் பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்…

 

சென்னையில் சுமார் 90ஆயிரம் பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்…

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,849பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் சுமார் 90ஆயிரம் பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்…

சென்னையில் 89,561பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 2,539 பேருக்கும் திண்டுக்கல்லில் 1,826 பேருக்கும் திருநெல்வேலியில் 2,972 பேருக்கும், ஈரோட்டில் 518, திருச்சியில் 2,686 பேருக்கும், நாமக்கல் 395 மற்றும் ராணிப்பேட்டை 2,784, செங்கல்பட்டு 10,495, மதுரை 8,705, கரூர் 296, தேனி 2,899 மற்றும் திருவள்ளூரில் 10,210பேருக்கு, தூத்துக்குடியில் 4,241 விழுப்புரத்தில் 2,501 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 520 பேருக்கும், திருவண்ணாமலையில் 4,444 தருமபுரியில் 486 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதேபோல் திருப்பூரில் 567, கடலூர் 1,991, மற்றும் சேலத்தில் 2,560, திருவாரூரில் 1,059, நாகப்பட்டினம் 480, திருப்பத்தூர் 659, கன்னியாகுமரியில் 2,721 மற்றும் காஞ்சிபுரத்தில் 5,697 பேருக்கும், சிவகங்கை 1,760 மற்றும் வேலூரில் 4,359 பேருக்கும், நீலகிரியில் 528 பேருக்கும், தென்காசி 1,344, கள்ளக்குறிச்சியில் 2,517 பேருக்கும், தஞ்சையில் 1,422, விருதுநகரில் 4,287, ராமநாதபுரத்தில் 2,692 பேருக்கும், அரியலூர் 710 மற்றும் பெரம்பலூரில் 248 பேருக்கும், புதுக்கோட்டையில் 1,186 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,627பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.