கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு!

 

கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,710பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 37பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு!

7பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் இதுவரை 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 3, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5, ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 18 பேர் சென்னையில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.