நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி!

 

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி!

இதையடுத்து அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சனிடம் நடிகர் ரஜினிகாந்த் போனில் நலம் விசாரித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி!
இந்நிலையில் நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதி மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயாபச்சனுக்கு கொரோனா இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.