வேலூரில் மேலும் 99 பேருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்!
Jun 30, 2020, 08:15 IST1593485117000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,949 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 1477 ஆக உயர்ந்துள்ளது.