கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சத்தை தாண்டியது.. பலி 6,363ஆக உயர்ந்தது..
வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒட்டுமொத்த அளவில் 66.81 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 3.91 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் 32.27 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
அந்த அமைப்பின் அறிக்கையின்படி, நம் நாட்டில் நேற்று மட்டும் புதிதாக சுமார் 9,889 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சத்தை தாண்டியது. அதேசமயம் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,11,900ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,363ஆக அதிகரித்தது.
கெரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தீவிரமாக அதிகரித்து வருகிறது. நேற்று நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 9,889 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது தற்போது கவலை அளிப்பதாக உள்ளது.