இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணி நேரத்தில் 331 பேர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணி நேரத்தில் 331 பேர் உயிரிழப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 71 லட்சத்து 89 ஆயிரத்து 861 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 8 ஆயிரத்து 240 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 35 லட்சத்து 30 ஆயிரத்து 766 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணி நேரத்தில் 331 பேர் உயிரிழப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணி நேரத்தில் 331 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,56,611லிருந்து 2,66,598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,29,215 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,466  ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரவில் 88,528 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 40,975 குணமடைந்துள்ள நிலையில், 3,169 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவுக்கு 331 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.