புதுச்சேரியில் மேலும் 32 பேருக்கு கொரோனா!
Jun 30, 2020, 09:50 IST1593490834000
இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 4லட்சத்து 2ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 56 லட்சத்து 48 ஆயிரத்து 728 பேர் குணமாகியுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.புதுச்சேரியில் கொரோனாவுக்கு பலியான எண்ணிக்கை 11 ஆக உள்ளது.