விழுப்புரத்தில் மீண்டும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

 

விழுப்புரத்தில் மீண்டும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழுப்புரத்தில் மீண்டும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடிவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரத்தைச் சேர்ந்த 43 வயதான அந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று மாலை அவர் தப்பியோடியதால், அவரை தேடும் பணியில் விக்கிரவாண்டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்த நபர் மூலம் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.