‘அடுத்த மாதம் கொரோனா அதிகரிக்கும்’ : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

 

‘அடுத்த மாதம் கொரோனா அதிகரிக்கும்’  : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

அக்டோபரில் கொரோனா அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

‘அடுத்த மாதம் கொரோனா அதிகரிக்கும்’  : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று உயர தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,693பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 40 ஆயிரத்து 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 25 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாவட்ட வாரியாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

‘அடுத்த மாதம் கொரோனா அதிகரிக்கும்’  : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

இந்நிலையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ” தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 1,500 முதல் 1,600 க்குள் பதிவாகி வரும் நிலையில், அடுத்த மாதம் இந்த நிலை மாறக்கூடும். எனவே மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.