மீண்டும் கொரோனா வார்டுகளாக மாறிய கல்லூரிகள்!

 

மீண்டும் கொரோனா வார்டுகளாக மாறிய கல்லூரிகள்!

தமிழகத்தில் இன்று புதிதாக 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து தற்காலிக மருத்துவ முகாம்களை அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

மீண்டும் கொரோனா வார்டுகளாக மாறிய கல்லூரிகள்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர சென்னை கல்லூரிகளில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக விடுத, அம்பேத்கர் கலைக்கல்லூரியில் புதிதாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஜெருசலேம். பாரதி, சென்னை ஐஐடி, குருநானக், வேலம்மாள், ஜவஹர் உள்ளிட்ட கல்லூரிகளிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்திப்பட்டு குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் புதிதாக 11,775 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.