சென்னையில் 22,160 பேருக்கு கொரோனா சிகிச்சை…வெளியானது மண்டலவாரி விவரம்!
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் இன்றைய மண்டலிவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 3,166 பேரும் கோடம்பாக்கத்தில் 2,322 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 2,039 பேரும் தேனாம்பேட்டையில் 2,051 பேரும் தண்டையார்பேட்டையில் 1,838 பேரும் திரு.வி.க மண்டலத்தில் 1,771 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 22,160 பேர் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மொத்த பாதிப்பு 58,327 ஆக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Overall zone-wise detailed status of COVID-19 cases in #Chennai.#Covid19Chennai #GCC #chennaicorporation pic.twitter.com/Hc0glu3R2m
— Greater Chennai Corporation (@chennaicorp) July 1, 2020