மதுரையில் 2 வது நாளாக 100க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று!

 

மதுரையில் 2 வது நாளாக 100க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் 2 வது நாளாக 100க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மதுரையில் 2 வது நாளாக 100க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று!

இந்நிலையில் மதுரையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,487 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு மதுரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.