நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக பாதிப்பு கட்டுக்குள் வந்தது. ஒரு மாத காலாமாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வந்ததால் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்தன. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கடந்த சில இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 533 பேர் பலியானதாகவும் 41,726 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 4,11,076 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 30 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்திருந்த நிலையில் நேற்றும் இன்றும் 40 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.