இந்தியாவில் 58.18 லட்சம் பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,141 பேர் பலி!

 

இந்தியாவில் 58.18 லட்சம் பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,141 பேர் பலி!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வரும் அதே வேளையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதில் ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கடந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த மாதம் குறைவாகவே இருக்கிறது. இதனால் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என மத்திய அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 58.18 லட்சம் பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,141 பேர் பலி!

அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 58,18,570 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 86,052 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் ஒரே நாளில் 1,141 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 92,290 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து இதுவரை 47.56 லட்சம் பேர் குணமடைந்ததால் தற்போது 9.70 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.