‘ஒரே நாளில் 550 பேர் மரணம்’ புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா?!

 

‘ஒரே நாளில் 550 பேர் மரணம்’ புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா?!

இந்தியாவில் புதிதாக 47,905 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

‘ஒரே நாளில் 550 பேர் மரணம்’ புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா?!

கொரோனா வைரஸால் கடும் பாதிப்பை சந்தித்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. கிட்டத்தட்ட 3 மாதங்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் நிலவியது. இதனால் தொழில்கள் அனைத்தும் முடங்கி, மக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கட்டாயமாக முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் படி, மக்கள் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருவதால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

‘ஒரே நாளில் 550 பேர் மரணம்’ புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா?!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 47,905 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் இதுவரை 86,83,917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 550 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,28,121 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 80,66,502 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததால் 4,89,294 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.