செங்கல்பட்டில் 10 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு!
Jul 20, 2020, 11:52 IST1595226124000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,979 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டில் மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது. இதனால் செங்கல்பட்டில் மொத்த தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.