ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்!

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,286 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி கள்ளிப்பட்டியை சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரை பார்க்க சென்ற மூதாட்டியின் உறவினரான திருச்சியை சேர்ந்த செவிலியர், மற்றும் அவரின் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்!

இதை தொடர்ந்து கள்ளிப்பட்டியில் அவரை சார்ந்த குடும்பத்தினருக்கு செய்யப்பட்ட சோதனையில் மூதாட்டி, 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் மற்றும் 56 வயது முதியவர் உள்ளிட்ட இரு ஆண்கள் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது