இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா…! 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா…! 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 78 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 32 ஆயிரத்து 168 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 40 லட்சத்து 35 ஆயிரத்து 421 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா…! 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா…! 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,62,379 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 311 பேர் உயிரிழந்துள்ளனர் மகாராஷ்டிராவில் இதுவரை 1,04,568 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 49,346 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,830 பேர் உயிரிழந்துள்ளனர்