திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா!

 

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா!

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 6,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 47 ஆயிரத்து 129ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 49,985ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று 18 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,945 ஆக அதிகரித்துள்ளது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா!

இந்நிலையில் திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யுமான டி.ஆர். பாலுவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவரது மகனும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.