தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

 

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

தமிழகத்தில் இன்று 11 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

கடந்த மார்ச் மாதம் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு பரவிய கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழியவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா வீரியம் குறைந்துள்ளது என்றாலும் கொரோனா தொற்று தினமும் பலருக்கு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது குறைந்து வருகிறது. இருப்பினும் தற்போது உருமாறிய கொரோனாவும் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவொருபுறமிருக்க கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் இந்தியா தீவிரம் காட்டி அதன் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது எனலாம். இதையடுத்து மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.அதன்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்துதல் குறித்து திட்டமிடல், மதிப்பிடுதல், சவால்களை அடையாளம் காணுதலுக்காக இந்த சோதனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது. காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்களில் ஒத்திகை நடக்கிறது. திருவள்ளூர் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, திருமழிசை, நேமம் சுகாதார நிலையங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை அரசு மருத்துவமனைகள், நிலக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி சமாதானபுரம் சுகாதார நிலையங்களில் ஒத்திகை நடக்கிறது.கோவை அரசு மருத்துவக்கல்லூரி, இஎஸ்ஐ மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவமனை, சூலூர் மருத்துவமனை, புலுவம்பட்டி அரசு சுகாதார நிலையம், SLM ஹோம் சுகாதார நிலையத்திலும் தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது.