தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை! எங்கெங்கு தெரியுமா?

 

தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை! எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை! எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஆரம்பத்தில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்ற நிலையில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று பாதிப்பு உள்ளது. இருப்பினும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை கூட்டியுள்ளது. பிரிட்டனில் பரவ தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா அங்கிருந்து தமிழகம் வந்த ஒருவரை தாக்கியுள்ளது. இதனால் சுகாதாரத்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை! எங்கெங்கு தெரியுமா?

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுதாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்களில் ஒத்திகை நடக்கிறது.பூந்தமல்லி அரசு மருத்துவமனை ,நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவ கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி சமாதானபுரம் சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.