நாளை முதல் ‘கொரோனா தடுப்பூசி’ ஒத்திகை : அமைச்சர் விஜயபாஸ்கர்

 

நாளை முதல் ‘கொரோனா தடுப்பூசி’ ஒத்திகை : அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜனவரி 2 ம் தேதி முதல் இலவச கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் ‘கொரோனா தடுப்பூசி’ ஒத்திகை : அமைச்சர் விஜயபாஸ்கர்

“முக கவசம் உயிர் கவசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். இதில் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் என்ன என்பது அடங்கிய விழிப்புணர்வு கையேட்டையும் அவர் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கினார்.

நாளை முதல் ‘கொரோனா தடுப்பூசி’ ஒத்திகை : அமைச்சர் விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “கொரோனோ தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. சுகாதாரத்துறைக்கு 2020 மறக்கமுடியாத ஆண்டு எனலாம். உயிர் பயத்தை காட்டிய கொரோனோ பெருந்தொற்றுக்கு எதிராக நாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். 2021 ஆண்டு சிறப்பான, பாதுகாப்பானஆண்டாக அமையும் என்று நம்புவோம். இலவச கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் மற்றும் 6 லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் கொரோனோ தடுப்பூசி போடுவதன் ஒத்திகை நாளை (ஜனவரி 2) முதல் தொடங்கவுள்ளது. கொரோனோ தடுப்பூசி கூடிய விரைவில் தமிழகத்தில் செலுத்தப்படும்

நாளை முதல் ‘கொரோனா தடுப்பூசி’ ஒத்திகை : அமைச்சர் விஜயபாஸ்கர்

லண்டனிலிருந்து வந்த 1554 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலர் தங்கள் முகவரியை மாற்றி கொடுத்ததால் கண்டுபிடிப்பது சவாலாக மாறியுள்ளது” என்றார்.